வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் உள்ள மேத்யூஸ் நாடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அணியில் இருந்த நட்சத்திர வீரரான ஏஞ்சலா மேத்யூஸ் திடீரென சொந்த நாடு திரும்புகிறார்.
11ஆம் திகதியான நேற்று அவர் சொந்த நாட்டுக்கு கிளம்புகிறார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
குடும்பம் தொடர்பான விடயத்தில் கலந்து கொள்ளும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே மேத்யூஸ் நாடு திரும்புகிறார் என தெரியவந்துள்ளது.
மேத்யூஸ் தொடரின் பாதியிலேயே விலகுவது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.